475. பயங்கரவாதத்தின் இன்னொரு முகம் காட்டும் இணைய போலிகள்-by கி அ அ அனானி
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரிந்ததே.மும்பை நகருக்குள் நுழையுமுன் கடலில் 5 மீனவர்களைக் கொன்றும் அராஜகம் நிகழ்த்தியுள்ளனர். மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து வர்த்தகக் கப்பலில் மும்பை வந்துள்ளனர். வழியில் கடலில் சென்று கொண்டிருந்த "குபேர் " என்ற மீன்பிடி படகைக் கைப்பற்றி அதிலிருந்த 5 பேரில் 4 பேரை கொன்றுள்ளனர் . மீதமிருந்த ஒரு மீனவரை மும்பை கடற்கரையை நெருங்கும் சமயம் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொன்றுள்ளனர். இவை அனைத்தையும் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் அமீன் கமால் விசாரணையின் போது கக்கியுள்ளான்.
மேலும் இந்தத் பயங்கரவாதி நாய்கள் மும்பை கடலோரப் பகுதியை நெருங்கும் போது கடற்படையினர் சிலர் பார்த்துள்ளனர்। அவர்களிடம் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் குபேர் மீன்பிடி படகில் கிடைத்த, இந்து மதத்தினர் கையில் அணியும் சிவப்புக் கயிறை சிலரும் குங்குமத்தை சிலரும் அணிந்துள்ளனர்। ஆனால் அவர்கள் பயந்த படி கடற்படையினர் அவர்களை விசாரிக்காததால் திட்டமிட்ட படி தங்கள் இலக்கை அடைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்।
உண்மை இப்படி இருக்க சில அன்னிய நாட்டு அடிவருடி நாய்கள், இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு துணை போகும் கயவர்கள் வந்தவர்கள் இந்துக்களாக இருக்கலாம் என்று திட்டமிட்டு செய்தி பரப்பத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியும் அருவருப்பும் உண்டாக்குகிறது। இதற்கு தமிழ் முதலான பல மொழி இணைய தளங்களில் உலா வரும் , மத வெறிக்காக தேசத்தையும்/இந்திய தேசியத்தையும் கா(கூ)ட்டிக் குடுக்கத் துணிந்த , சில புல்லுருவி நாய்களும் அடக்கம் என்பது மிகவும் வெட்க கரமானது, கேவலமானது, அவலமானாது। அதுவுமல்லாது இந்தப் புல்லுருவிகள் தமிழ் இணையத்தில் தமிழர்களின் ஆதரவு பெற தங்கள் இணைய பக்கங்களின் பெயர்களிலும் தங்களது இணைய புனைப் பெயர்களிலும் தமிழ், தமிழன் என்று இணத்துக் கொண்டு , தாங்களும் போலியாக சிவப்புக் கயிறணிந்து , குங்குமம் வைத்துக் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சற்றும் சளைக்காத பயங்கரவியாதிகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
நேரடியாக ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளை 3 நாட்களில் (183 + 14) உயிர்களைப் பலி கொடுத்தாவது அழித்து விட்டோம்। ஆனால் மறைமுகமாக இந்திய இறையாண்மைக்கு உலை வைக்கும், அதன் அடிப்படையையே கலகலக்க வைக்கும் இந்தப் போலிகளை என்ன பூச்சிக்கொல்லி கொண்டு அழிப்பது என்ற ஆதங்கம் மேலிடுகிறது। ஒரு வேளை இதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நேர்மையிலும் நியாயத்திலும் நம்பிக்கை கொண்ட இந்திய இசுலாமியர்கள் இது போன்ற கீழ்த்தரமான புல்லுருவிகளை இனம் கண்டு ஒதுக்குவதன் மூலமும், அருவருக்கத்தக்க இந்த ஜந்துக்களை வெளிப்படையாய் அடையாளம் காட்டி எதிர்க்க முன்வருவதன் மூலமும் மட்டுமே இந்திய ஜனநாயக நாட்டில் மத நல்லிணக்கம் தழைக்க முடியும்। மேலும் இது போன்ற பயங்கரவாதங்களும் , மதக்கலவரங்களும் அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் அரசியல் நாடகங்களும் அரங்கேறுவதைத் தடுக்க முடியும்.
இந்தியராய் ஒன்று படுவோம் । இந்த நாட்டைக் காப்போம்.
By கி அ அ அனானி